தொலைத்தொடர்பு கம்பங்களை துவம்சம் செய்த காட்டு யானை

Share

செட்டிக்குளம் மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பங்களை காட்டு யானைகள் அடித்து நொருக்கி சேதப்படுதிய சம்பவம் இன்று (18.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு கிலோமீற்றர் முன்பாக டயலொக் மற்றும் மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினரால் அமைக்கப்பட்ட பதினாறு தொலைத்தொடர்பு கம்பங்களை யானைகள் உடைத்து துவம்சம் பண்ணியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று திருத்தல் பணிகளை மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மை காலங்களாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதும் , பயிர் நிலங்களை சேதப்படுத்துவதுமான நிலை ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு