தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் இன்று கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில், திலீபனின் உருவ படத்தை கையில் பச்சை குத்தியிருந்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுவரும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரே இவ்வாறு திலீபனின் உருவப் படத்தை பச்சை குத்தியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.