பிரித்தானியாவிற்குள் குடியேறுவோறுக்கு எதிராக அமுலாகும் புதிய சட்டம்

Share

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலர் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

பெரும்பாலான நாடுகளில் இவ்வாறு சட்டவிரோதமாக நுழைபவர்களை பிடித்து சிறையில் அடைப்பதும் பின்னர் சொந்த நாடுகளுக்கு அனுப்புவதும் வழமையாகிவிட்டது.

அதே போன்று இங்கிலாந்திலும் நாளுக்கு நாள் இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் அவர்களை கைது செய்யவோ சொந்த நாடுகளுக்கு அனுப்பவோ செய்யாமல் இங்கிலாந்து அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுக்கட்டப்பட உள்ளனர். இதற்காக 240 மில்லியன் பவுண்களை ருவாண்டாவுக்கு இங்கிலாந்து வழங்கியுள்ளது.

தற்போது இந்த நாடுகடத்தும் சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அமர்வு அமல்படுத்தியுள்ளது.

இது ஜனநாயக முறைக்கே எதிராக இருப்பதாக ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் வருத்தம் தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு