விமானப் படையின் தாக்குதலில் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவிகளுக்கு அஞ்சலி!

Share

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகள் மீது இலங்கை விமானப் படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் ஆகியோரின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செஞ்சோலை வளாகத்தில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

https://youtu.be/0eU_U-e72qw

சமூகச் செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் குறித்த பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த பகுதியில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகச் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு