மனைவியின் கண் முன்னால் கணவன் வெட்டிப் படுகொலை! – கொழும்பில் பயங்கரம்

Share

குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

ஓட்டோ சாரதியான இரண்டு பிள்ளைகளின் தந்தையே (வயது 42) சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் நேற்று மாலை தனது இரண்டு பிள்ளைகளையும் ஓட்டோவில் பிரத்தியேக வகுப்புக்காக இறக்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அவ்வேளை மற்றுமொரு ஓட்டோவில் கூரிய ஆயுதங்களுடன் வந்து இறங்கிய நால்வர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து குறித்த குடும்பஸ்தரை சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

மனைவியின் கண் முன்னால் கணவனைக் குறித்த கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அயல்வீட்டுக்காரர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வட்டிக்குப் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு