யாழ். இந்துக் கல்லூரி மாணவனே தென்மராட்சி விபத்தில் பலி!

Share

யாழ்ப்பாணம், தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார்.

கைதடி, நுணாவில் வைரவ கோவிலுக்கு அருகில் இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் சாவகச்சேரியைச் சேர்ந்த சிவபாலன் பிரவீன் (வயது 19) எனும் மாணவனே  உயிரிழந்துள்ளார்.

மாட்டு வண்டி சவாரிப் போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற  லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=KSJzcmcM3a4&embeds_referring_euri=https%3A%2F%2Fviligal.com%2F52379%2F&source_ve_path=OTY3MTQ&feature=emb_imp_woyt

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு