மலையக எழுச்சி நடை பயணத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று! – மாத்தளையில் பிரமாண்ட நிகழ்வு

Share

மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக எழுச்சி நடை பயணத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று மாத்தளையில் இடம்பெறவுள்ளது.

மலையகத் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சி நடை பயணம்’ முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2023 ஜுலை 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரை இன்று மாத்தளையை வந்தடையவுள்ளது. மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய ‘மாண்புமிகு மலையக மக்கள்’ கூட்டிணைவால் இப்பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு