அதிக மருந்துப் பாவனையால் இரத்த வாந்தி எடுத்து ஒருவர் சாவு!

Share

அதிகளவான மருந்துப் பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

யாழ். வடமராட்சி, இமையான் பகுதியைச் சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (10) உயிரிழந்துள்ளார்.

அதிகளவான மருந்துப் பாவனையால்  உயிரிழப்பு ஏற்பட்டது எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், கடந்த 8 மாத காலமாக  உளநோய்க்கு உள்ளான நிலையில் அதற்குச் சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகளைப் பாவித்து வந்தவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு