வெள்ளவத்தையில் 8 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞர் சாவு!

Share

கொழும்பு, வெள்ளவத்தையில் மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து  இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியிலுள்ள 8 மாடிக் கட்டடத்தில் இருந்து குறித்த இளைஞர் தவறி விழுந்து சாவடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைக்காகக் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு