பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Share

திம்பிலி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள  திம்பிலி ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 73 மாணவர்களுக்கான கற்றல் ஒரு தொகுதி உபகரணங்கள் புதிய வாழ்வு நிறுவனத்தினரால் இன்றையதினம் (05) வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

புதிய வாழ்வு நிறுவனத்தினுடைய பிரித்தானிய இயக்குனர்களில் ஒருவரான சுப்ரமணியம் மகேஸன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வாழ்வு நிறுவனத்தின் ஒழுங்கமைப்பிலேயே  இவ் உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் குணபாலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புதிய வாழ்வு நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குனர் ப.பார்த்தீபன், நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் வி.சு.விஜயலாதன்,  நிர்வாக உத்தியோகத்தர் இ.சித்திராங்கன், மாணவ பிரதிநிதி பா.சதீஸ், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு