வாழைச்சேனையில் ஒருவர் குத்திக்கொலை

Share

மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவர் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு