பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமை பணிப்பாளரும், செயற்பாட்டாளரும் தாயக விடுதலைப் பற்றாளருமாக இருந்த அமரர் சந்திரராசாஅகிலன் அவர்கள் 22.09.2023 அன்று வெள்ளிக்கிழமை பிரான்சில் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை (30.09.2023) காலை 9.00 மணி முதல் மாலை 16.00 மணி வரை பொதுமக்களின் இறுதி வணக்க நிகழ்வுக்காக சார்ஸல் நகரில் பின்வரும் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. Espace Venise 30,Route de Groslay 95200 Sarcelles.
திங்கட்கிழமை (02.10.2023) பிற்பகல் 15.00 முதல் 16.30 மணிக்கு Cimetière pantin 11,Av.Du Cimetière Parisien 93500 Pantin எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.