இஸ்லாமியர்களைத் தொட்டால் பிரான்ஸ் அழிக்கப்படும் என அல்-கைதா எச்சரித்துள்ளது.
பிரான்ஸ் மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் கடுமையான பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்படும்.
இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மீது பிரான்சைத் தொடர்ந்து சுவீடனும் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பதால், சுவீடனிற்கும் பிரெஞ்சு, மண்ணில் வைத்துத் தாக்குதல் நடாத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பாடசாலைகளில் மதச்சார்பின்மையைப் பேணுவதற்காக, இஸ்லாமிய மொக்காடு ஆடையான அபயாவினைத் தடை செய்திருப்பதை எதிர்த்து, இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களைத் தொட்டால் பிரான்ஸ் அழிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.