மட்டு வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு ஏற்பட்ட நிலை!

Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

உணவு வழங்குனர்களுக்கு நிதி வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விநியோகஸ்த்தர்களுக்கான கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாது உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைக்கு உணவு வழங்குவதற்கான டெண்டர்கள் அதிக விலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விநியோகஸ்த்தர்களுக்கு உரிய கட்டணத்தை வழங்க முடியாததால் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு